Friday 19th of April 2024 07:00:48 AM GMT

LANGUAGE - TAMIL
-
ஐந்து மாதக் குழந்தை உட்பட்ட 18 பேருக்கு குடாநாட்டில் தொற்று!

ஐந்து மாதக் குழந்தை உட்பட்ட 18 பேருக்கு குடாநாட்டில் தொற்று!


யாழ்.பல்கலைக்கழக ஆய்வு கூடத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் ஐந்து மாதக் குழந்தை ஒருவர் உட்பட்ட யாழ்.குடாநாட்டைச் சேர்ந்த 18 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தினைச் சேர்ந்த 327 பேருக்கு இன்று பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

அவற்றின் அடிப்படையில்,

சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் எண்மருக்கும்

யாழ்ப்பாணம் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இருவருக்கும்

யாழ்.மாநகரசபை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஏழு பேருக்கும் (ஒருவர் ஐந்து மாத ஆண் குழந்தை)

உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE