முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலையில் இன்று மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 261 பேருக்கு கொரோனாத் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த தகவலை முல்லைத்தீவு மாவட்ட சுகாதாரத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக தொற்றாளர்களின் தொகை அதிகரித்து வந்த நிலையில் தொழிற்சாலையின் ஏற்பாட்டில் இன்று அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இதன் போதே 261 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை