சீனாவின் வடமேற்கு மற்றும் தென்மேற்கு பகுதிகளில் தொடர்ச்சியான, வலுவன நில அதிர்வுகள் ஏற்பட்டதில் மூவர் பலியானதுடன், 27 -க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
சீனாவின் தென்மேற்கு பகுதியான - யுன்னான் மாகாணத்தில் உள்ள தலி பாய் தன்னாட்சி பிராந்தியத்தில் உள்ள யாங்பி யி பகுதியில் நேற்று இரவு முதல் இன்று சனிக்கிழமை அதி தொடர்ச்சியாக 3 வலுவான நில அதிர்வுகள் ஏற்பட்டன.
நிலநடுக்கத்தால் இன்று சனிக்கிழமை காலை 6 மணி நிலவரப்படி 3 பேர் கொல்லப்பட்டனர். மற்றும் 27 பேர் காயமடைந்தனர் என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலநடுக்கம் 12 மாவட்டங்களிலும், நகரங்களிலும் உணரப்பட்டது. யாங்பி பிராந்தியம் மிக மோசமான பாதிப்புக்குள்ளானது என்று அந்த மாவட்ட தலைவரான யாங் குசோங் கூறினார்.
யாங்பி பிராந்தியத்தில் இரண்டு மரணங்களும், யோங்பிங் பிராந்தியத்தில் ஒரு இறப்பும் பதிவாகியுள்ளன. மூன்று பேர் பலத்த காயமடைந்தனர், மேலும் 24 பேருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டன.
20,192 குடும்பங்களைச் சோ்ந்த சுமார் 72,317 பேர் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
5.0 முதல் 7.3 ரிக்டர் அளவு வரை அடுத்தடுத்த நான்கு நிலநடுக்கங்கள் நேற்று இரைவு 9 மணி முதல் இன்று சனிக்கிழமை அதிகாலை வரைன யாங்பி பிராந்தியத்தை தாக்கியதாக சீனா நில அதிர்வு கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.
இப்பகுதியில் இன்று அதிகாலை 2 மணி நிலவரப்படி 166 பாரிய நிலநடுக்கத்தின் பின்னரான சிறிய அதிர்வுகள் பதிவாகியுள்ளன.