கொரோனாத் தொற்றுக்கு உள்ளான ஆறு பேர் கடந்த 24 மணி நேரத்தில் திருகோணமலை மாவட்டத்தில் உயிரிழந்துள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் பிரேமானந்த் தெரிவித்துள்ளார்.
கொரோனா நிலவரங்கள் தொடர்பில் கருத்துரைக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கையில் ஏற்பட்ட மூன்றாவது அலையின் பின்னர் 61 பேர் கொரோனாத் தொற்றினால் உயிரிழந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, கிழக்கு மாகாணம், திருகோணமலை