Friday 29th of March 2024 09:14:55 AM GMT

LANGUAGE - TAMIL
.
திருகோணமலையில் தொடரும் கொரோனா நெருக்கடி: இன்று மேலும் 07 பேர் பலி, 63 பேருக்கு தொற்றுறுதி!

திருகோணமலையில் தொடரும் கொரோனா நெருக்கடி: இன்று மேலும் 07 பேர் பலி, 63 பேருக்கு தொற்றுறுதி!


திருகோணமலையில் கொரோனாத் தொற்று நெருக்கடி நிலை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இன்று (26) மேலும் 07 பேர் உயிரிழந்துள்ளதுடன், 63 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக மரணிக்கும் சம்பவங்கள் தினமும் இடம்பெற்று வரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.

திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் ஏழு கொவிட்-19 மரணங்கள் பதிவாகியுள்ளதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணியகம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து இதுவரையான நாட்களில் திருகோணமலை மாவட்டத்தில் உயிரிழந்தவர்களது எண்ணிக்கை 69 ஆக அதிகரித்துள்ளதாக அந்த பணியகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் - 02 பேர்

தம்பலகாமம் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் - 02 பேர்

உப்புவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் - ஒருவர்

கந்தளாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் - ஒருவர்

குச்சவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் - ஒருவர்

என ஏழு பேர் இவ்வாறு கொரோனாத் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கடந்த 24 மணித்தியாலங்களில் திருகோணமலை மாவட்டத்தில் 63 தொற்றாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.

இதையடுத்து கடந்த மே மாதம் முதலாம் திகதி முதல் இதுவரை 1,403 பேருக்கு தொற்றுறுதியாகியுள்ளதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, கிழக்கு மாகாணம், திருகோணமலை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE