பங்களாதேஷ் அணிக்கு எதிரான 3வது சர்வதேச ஒருநாள் போட்டியில் 97 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆறுதல் வெற்றியை பதிவு செய்துள்ளது இலங்கை அணி.
3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 286 ஓட்டங்களைப் பெற்றது.
இதையடுத்து 287 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 42.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்களையும் இழந்து 189 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
பந்து வீச்சில் சமீர 5 விக்கெட்டுக்களையும், வனின்டு ஹசரங்க மற்றும் ரமேஷ் மென்டிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும், பெர்ணான்டோ ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.இதையடுத்து 97 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.
இறுதி போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்ற போதிலும், முதலிரு போட்டிகளிலும் தோல்வியடைந்தமையால் 2:1 என்ற கணக்கில் தொடரை இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: விளையாட்டு, புதிது
Tags: இலங்கை