Wednesday 17th of April 2024 08:31:52 PM GMT

LANGUAGE - TAMIL
.
திருகோணமலையில் ஐவரை பலியெடுத்த கொரோனாவுக்கு 73 பேர் பாதிப்பு!

திருகோணமலையில் ஐவரை பலியெடுத்த கொரோனாவுக்கு 73 பேர் பாதிப்பு!


திருகோணமலையில் கொரோனா தொற்று காரணமாக நேற்றைய தினம் மேலும் ஐவர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் 73 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்ப்பட்டுள்ளது.

நேற்று (மே-29) பி.பகல் வெளியான தகவல்களின் அடிப்படையில், கடந்த 24 மணித்தியாலங்களில் 5 பேர் கொவிட்-19 தொற்றால் உயிரிழந்ததாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் வீ.பிரேமானந் தெரிவித்துள்ளார்.

கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இரண்டு பேரும், மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3 பேர் உள்ளடங்களாக 5 பேர் கடந்த 24 மணித்தியாலத்தில் உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து திருகோணமலை மாவட்டத்தில் கொவிட்-19 தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 76 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் குறித்த காலப்பகுதியில் 73 பேருக்கு தொற்றுறுதியாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் கிண்ணியா, மூதூர், உப்புவெளி, திருகோணமலை, குச்சவெளி, குறிஞ்சாக்கேணி, மூதூர் ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளைச் சேர்ந்த 73 பேருக்கே கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

இந்தநிலையில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 3,207ஆக அதிகரித்துள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் வீ.பிரேமானந் கூறியுள்ளார்.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, கிழக்கு மாகாணம், திருகோணமலை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE