சீனாவின் குவாங்டாங்கின் மாகாணம் - லிவான் மாவட்டம், குவாங்சோ நகரில் கடந்த ஒரு வாரத்தில் 20 புதிய கொரேனா தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து அந்தப் பகுதி முடக்கப்பட்டுள்ளது.
தொற்று நோயாளர்கள் கண்டறியப்பட்ட 5 தெருக்களில் இருப்பவர்கள் யாரும் வீட்டை விட்டு யாரும் வெளியே வரக்கூடாது என கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நகரில் உள்ள 1.5 கோடி பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யும் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. அதேநேரத்தில் பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
அறிகுறியற்ற புதிய தொற்று நோயாளர்கள் கடந்த வெள்ளிக்கிழமை பதிவானதாக குவாங்டாங்கின் மாகாண சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. இவற்றில் சிலர் இந்திய திரிவு வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்தே குவாங்சோ நகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளைச் சேர்ந்த ஒன்றரைக் கோடி பேருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், அங்கு ஆபத்தான பிரிவினர் முன்னணி சுகாதார பணியாளர்களுக்கு விரைவில் முழுமையாக தடுப்பூசி போடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), சீனா