தமிழகத்தில் கொரோனா 2வது அலையின் தீவிரம் படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. இதனால் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டு வருகின்றது.
ஆனால், பொதுமக்கள் சிலர் தடுப்பூசி போட்டுக் கொள்வதில் அலட்சியம் காட்டுகிறார்கள். இதனால் திரைப்பிரபலங்கள் பலரும் கொரோனா தடுப்பூசி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள். இது இவ்வாறு இருக்க தடுப்பூசி தொடர்பில் நடிகர் சத்யராஜ் கூறியிருப்பதாவது தடுப்பூசி பற்றி ஏதேனும் குழப்பம் இருந்தால், தெரிந்த மருத்துவரை அணுகுங்கள், அவர்கள் சரியான அறிவுரை வழங்குவார்கள்.
சமீபத்தில் கேட்கும் விஷயம் எல்லாம் மனவேதனையை தருகிறது. முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளி, கிருமி நாசினி மூலம் கையை சுத்தப்படுத்துவது எல்லாம் அனைவரும் செய்கிறார்கள். ஆனால், இந்த தடுப்பூசி விஷயத்தில் பெரிய குழப்பம் இருக்கிறது.
தயவுசெய்து மருத்துவர்களை அணுகி அறிவுரையை பெற்று தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்” என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Category: சினிமா, புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா