Thursday 25th of April 2024 12:00:42 AM GMT

LANGUAGE - TAMIL
-
இந்தியாவில் நேற்று 2,795 பேர் மரணம்;  கொரோனா தொற்று பாதிப்பு குறைகிறது!

இந்தியாவில் நேற்று 2,795 பேர் மரணம்; கொரோனா தொற்று பாதிப்பு குறைகிறது!


இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று நோயாளர் தொகை தொடர்ந்து குறைந்து வருகிறது.

கடந்த 24 மணிநேரங்களில் புதிதாக 1 இலட்சத்து 27 ஆயிரத்து 510 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய மத்திய சுகதார அமைச்சு இன்று காலை விடுத்துள்ள நாளாந்த தொற்று நோய் நிலவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கடந்த 24 மணி நேரங்களில் 2,795 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தனர்.

புதிய தொற்று நோயாளர்களுடன் நாட்டில் பதிவான மொத்த தொற்று நோயாளர் தொகை 2 கோடியே 81 இலட்சத்து 75 ஆயிரத்து 44 ஆக அதிகரித்துள்ளது.

மொத்த கொரோனா மரணங்களும் 3 இலட்சத்து 31 ஆயிரத்து 895 ஆக உயர்ந்துள்ளன.

அதே சமயம் கடந்த 24 மணி நேரங்களில் 2 இலட்சத்து 55 ஆயிரத்து 287 பேர் குணமடைந்தனர். இதன் மூலம் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 59 இலட்சத்து 47 ஆயிரத்து 629 ஆக பதிவாகியுள்ளது.

நாடு முழுவதும் தற்போது 18 இலட்சத்து 95 ஆயிரத்து 520 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக மத்திய சுகாதார அமைச்சு இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE