பிரித்தானியா உள்ளிட்ட 8 நாடுகளுக்கான சா்வதேச விமான சேவையை இம்மாதம் முதல் மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
எனினும் துருக்கியுடனான விமான சேவைகளுக்கான தடை மேலும் 3 வாரங்கள் நீடிக்கப்படும் எனவும் ரஷ்யா அறிவித்துள்ளது.
டிசம்பர் மாத இறுதியில் ரஷ்யாவிற்கும் பிரித்தானியா உள்ளிட்ட சில நாடுகளுக்கும் இடையிலான விமான சேவைகளை மொஸ்கோ இடைநிறுத்தியது.
ஆபத்தான வகை வைரஸ்கள் பரவியதை அடுத்து அமுல் செய்யப்பட்ட பயணத் தடை இன்று ஜூன் -01 முதல் முடிவுக்கு வருகிறது.
இந்நிலையில் நாளை முதல் மொஸ்கோ – லண்டன் இடையிலான விமான சேவைகள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் ஆஸ்திரியா, ஹங்கேரி, லெபனான், லக்சம்பர்க், மொரீசியஸ், மொராக்கோ, குரோசியா ஆகிய நாடுகளுடனான சர்வதேச விமான சேவையை குறிப்பிட்ட அளவில் மீண்டும் இயக்குவது என ரஷ்யா முடிவு செய்துள்ளது.
மொஸ்கோவில் இருந்து லண்டன், ஆஸ்திரியாவின் வியன்னா, ஹங்கேரி நாட்டின் புடாபெஸ்ட்-பொஸ்கோ, மொரீசியஸ் நாட்டின் போர்ட் லூயிஸ், மொராக்கோ நாட்டின் ரபாத், குரோசியா நாட்டின் ஜக்ரெப் ஆகிய இடங்களுக்கான விமான சேவைகள் வாரம் இரு முறை என்ற அடிப்படையில் இயக்கப்பட உள்ளன.
மொஸ்கோ – பெய்ரூட் மற்றும் மொஸ்கோ – லக்சம்பர்க் இடையிலான விமான சேவைகள் வாரம் ஒரு முறை என்ற அடிப்படையில் இயக்கப்பட உள்ளதாகவும் ரஷ்யாஅறிவித்துள்ளது.