Wednesday 24th of April 2024 05:03:34 PM GMT

LANGUAGE - TAMIL
-
அவல் என்று நினைத்து உரலை இடித்திருக்கின்றார் - சுமந்திரன் தொடர்பில் டக்ளஸ்!

அவல் என்று நினைத்து உரலை இடித்திருக்கின்றார் - சுமந்திரன் தொடர்பில் டக்ளஸ்!


கடலுணவு உண்பது தொடர்பாக விஞ்ஞான ரீதியான ஆய்வுகள் ஏதும் இன்றி, உண்மையைப் பொய்யாகவும் பொய்யை உண்மையாகவும் புரட்டி புரட்டி போடுகின்ற தொழில் திறனின் அடிப்படையில் பொறுப்பற்ற கருத்தினை எம்.ஏ.சுமந்திரன் வெளிப்படுத்தியுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றஞ்சாட்டியுள்ளார்.

அண்மையில் "கடலுணவுகளை உட்கொள்தற்கு மக்கள் தயங்கத் தேவையில்லை" என கூறிய கடற்றொழில் அமைச்சரின் கருத்து பொறுப்பற்றது என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனினால் ஊடகங்களுக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பாக இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் கப்பல் விபத்து காரணமாக பாதிப்புக்கள் ஏற்பட்டிருக்கும் என்று கருதப்படுகின்ற கடற் பரப்பில் மீன் பிடித் தொழிலில் ஈடுபடுவதற்கு இறுக்கமான தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

வடக்கு கிழக்கு உட்பட்ட நாட்டை சூழவுள்ள பாதிப்புக்கள் அற்ற கடல் பிரதேசங்களிலும் ஆழ்கடல் பிரதேசத்திலும் பிடிக்கப்படுகின்ற மீன்களே கொழும்பு உட்பட நாட்டின் அனைத்து பிரதேச சந்தைகளிலும் தற்போது விற்பனை செய்யப்படுகின்றன. அவ்வாறு சந்தைகளுக்கு கொண்டு வரப்படுகின்ற மீன்களிலும் சந்தேகத்திற்கிடமான பதார்த்தங்கள் கலந்து இருக்கின்றதா என்பது தொடர்பான பரிசோதனைகளை மேற்கொள்வதற்கும் ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இவ்வாறான பின்னணியிலேயே கடலுணவுகளை உண்பதற்கு மக்கள் தயங்கத் தேவையில்லை என்ற கருத்து முன்வைக்கப்பட்டிருந்தது.

ஆனால், இவை தொடர்பில் எந்தவிதமான பிரஞ்ஜையும் இன்றி, அரசாங்கத்திற்கும் எனக்கும் எதிரான கருத்தை தெரிவிக்க வேண்டும் என்கின்ற அரசியல் நோக்கத்துடன் கருத்து தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், அவல் என்று நினைத்து உரலை இடித்திருப்பதாகவும் கடற்றொழில் அமைச்சர் தெரிவித்துளளார்.

அதாவது கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்ட கடல் பிரதேசங்களிலேயே பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என்று சந்தேகிக்கப்படுகின்றது.

அவ்வாறான சூழலில் நாடளாவிய ரீதியில் கடலுணவு உட்கொள்வதை மக்கள் தவிர்ப்பார்களாயின், வடக்கு கிழக்கு பிரதேசத்தில் கடற்றொழில் சார் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்ற பல்லாயிரக்கணக்கான மக்களும் பாதிக்கப்படுவார்கள் என்பது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கரிசனைபட்டதாக தெரியவில்லை என்று தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறுகிய அரசியல் நோக்கங்களுக்காகவும், சுயநலன்களுக்காகவும் வடக்கு மாகாண சபை ஆட்சியை வீணாக்கியவர்கள், கிழக்கு மாகாண சபையை தாரை வார்த்துக் கொடுத்தவர்கள், ரணில் மைத்திரி ஆட்சியில் கிடைத்த வாய்ப்பை அலரிமாளிகைக்குள் அடகு வைத்தவர்கள், கடற்றொழிலாளர்கள் தொடர்பாக அக்கறையோடு செயற்படுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், இவ்வாறனவர்களின் கடந்த கால போலித் தேசிய செயற்பாடுகளும், தீர்க்கதரிசனமற்ற குறுகிய சிந்தனைகளும், அரசியல் அனுபவமற்ற சிறுபிள்ளைதனங்களையும் அதிகாரங்களை பாதுகாத்து முன்னோக்கி நகர வேண்டும் என்ற கொள்கைகள் அற்ற வியாபார சிறுமைகளுக்கும் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றது என்பதை எதிர்காலத்திலாவது சுமந்திரன் போன்றவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: ம.ஆ.சுமந்திரன், இலங்கை, உலகம், மேற்கு மாகாணம், கொழும்பு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE