காதலுக்காக பலர் எந்த எல்லைக்கும் செல்வார்கள். வாரணம் ஆயிரம் படத்தில் நடிகர் சூர்யா காதலுக்காக அமெரிக்கா போனது போல், பல சம்பவங்கள் நடந்தது கொண்டு தான் உள்ளன. அது எல்லாவற்றிற்கும் ஒரு படி மேலே போய் உ.பி மாநிலத்தில் ஒரு சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது.
காதலிக்காக காதலன் காதலியின் திருமண வீட்டிற்கே சென்ற சம்பவம் நடந்துள்ளது. ஒரு பெண்ணிற்கு திருமண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்பொழுது திருமண வீட்டிற்கு மணப்பெண் போன்ற அலங்காரத்தில் ஒரு பெண் உள்ளே சென்று திருமணமாகப்போகும் மணப்பெண்ணை பார்க்க முயற்சி செய்துள்ளார்.
அவர் நடந்து செல்வது, ஆள் நடவடிக்கையை பார்த்தால் ஆண் போல தெரிகிறது. ஆனால் பெண் உடை போட்டிருக்கிறாரே என சந்தேகித்து அவரை பிடித்து விசாரித்த பொழுதே அவர் ஆண்தான் மணப்பெண்ணின் முன்னால் காதலர் என்பதும் தெரிய வந்துள்ளது.
அதன் பின் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த பெண் அவருடன் வர விருப்பபட்டால் அவரை அழைத்துச் செல்லலாம் என போலீசார் கூறயுள்ளனர். சினிமா படங்களில் வருவது போன்ற பெண்ணை முன்னாள் காதலன் கடத்த முயன்ற விவகாரம் தற்போது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.