சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாநாடு’. இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டது.
இந்த நிலையில் ‘மாநாடு’ படத்தின் முதலாவது சிங்கிள் பாடல் மே 14-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இயக்குனர் வெங்கட்பிரபுவின் தாயார் மறைவை அடுத்து முதலாவது சிங்கிள் பாடல் ரிலீஸ் திகதி ஒத்தி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
அதன்பின் கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக மக்கள் சிரமத்தில் இருக்கும் நேரத்தில் ‘மாநாடு’ படத்தின் சிங்கிள் பாடலை வெளியிட்டு கொண்டாடுவது சரியில்லை எனவும் லொக்டவுன் முடிந்து இயல்பு நிலைக்கு திரும்பியவுடன் ‘மாநாடு’ படத்தின் சிங்கிள் வெளியாகும் என்றும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார்
இந்த நிலையில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா அவர்கள் ‘மாநாடு’ படத்தின் சிங்சிங்கிள் பாடல் மிக விரைவில் வெளியாக இருப்பதாக அறிவித்துள்ளார். இதனால் சிம்பு ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருஇருக்கின்றனர்.