சீனாவின் கன்சு மாகாணத்தில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற ரயில் விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.
உரும்கியில் இருந்து ஹாங்க்சோவுக்குச் செல்லும் ரயில், ஜின்சங் நகரில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 05:25 (21:25 GMT) மணியளவில் ரயில்வே தொழிலாளர்கள் மீது மோதியதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விபத்தை அடுத்து சம்பவ இடத்துக்கு அவசர மீட்பு குழுவினர் மற்றும் மருத்துவர்கள் விரைந்து மீ்ட்பு மற்றும் உதவிப் பணிகளில் ஈடுபட்டனர்.
இந்த விபத்து எவ்வாறு இடம்பெற்றது? என்பது குறித்து விமர்சன ரீதியில் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. "தொழிலாளர்கள் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டிருந்தால், ரயில் ஓட்டுநர்கள் அதைப் பற்றி அறிந்திருக்க வேண்டும். அறியாமல் இது எவ்வாறு இடம்பெற்றது?” என இணையதளங்களில் பலர் விமர்சித்துள்ளனர்.