சீயான் விக்ரமின் கண்களின் வார்த்தைகள் படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி அழகேசன் படத்தில் சத்யராஜுக்கு ஜோடியாகவும் தாயே புவனேஸ்வரி என்ற படத்திலும் நடித்துள்ளார் நடிகை பிரேமா.
அவருக்கும், தொழில் அதிபர் ஜீவன் அப்பாச்சுவுக்கும் கடந்த 2006ம் ஆண்டு திருமணம் நடந்தது. பின் 2016ம் ஆண்டு ஜீவனிடம் இருந்து விவாகரத்து பெற்றார்.
தற்போது 44 வயதாகும் பிரேமாவுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க அவரின் குடும்பத்தார் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.
இதையடுத்து நான் இரண்டாவது திருமணம் செய்யப் போவதாக வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது அதை நம்ப வேண்டாம் என பிரேமா குறிப்பிட்டுள்ளார்.