Thursday 28th of March 2024 12:41:57 PM GMT

LANGUAGE - TAMIL
-
இங்கிலாந்தில் இரண்டு மாதங்களின் பின்  மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று!

இங்கிலாந்தில் இரண்டு மாதங்களின் பின் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று!


இங்கிலாந்தில் சமூக முடக்கலை அடுத்து சற்றுக் குறைந்திருந்த கொரோனா வைரஸ் தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது.

கடந்த 24 மணி நேரங்களில் இங்கிலாந்தில் 6,238- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

நேற்று உறுதிப்படுத்தபட்ட தொற்று நோயாளர்களுடன் இங்கிலாந்தில் பதிவான மொத்த தொற்று நோயாளர் தொகை 45 இலட்சத்து 6 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

நேற்று மேலும் 11 கொரோனா மரணங்கள் பதிவான நிலையில் மொத்த மரணங்கள் 1 இலட்சத்து 27 ஆயிரத்து 823 ஆக உயர்ந்துள்ளன.

இங்கிலாந்தில் கடந்த மார்ச் 25 ஆம் திகதி 6,397- பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. அதன் பின்னர் தொற்று நோயாளர் தொகை குறைந்தது. இந்நிலையில் சுமார் 2 மாதங்களின் பின்னர் மீண்டும் தொற்று நோயாளர் தொகை 6 ஆயிரத்தைக் கடந்து நேற்று பதிவானது.

இந்தியாவில் முதன் முதலாக கண்டறியப்பட்டதாக கூறப்படும் B.1.1.7 என முன்னர் அழைக்கப்பட்ட டெல்டா வகை கொரோனா திரிவு இங்கிலாந்தில் வேகமாக பரவி வருவதாக கூறப்படுகிறது.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), இங்கிலாந்து



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE