கொரோனா தொற்று நோய்க்கான தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை திருகோணமலையில் நாளை தொடங்குவதாக சுகாதாரத் தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
அதற்கமைய திருகோணமலையின் பூம்புகார் கிராமத்த்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே முதற்கட்டமாக தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளன.
நாளை 366 பேருக்கான தடுப்பூசிகள் செலுத்தப்படத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் சீனாவின் சினோபாம் தடுப்பூசிகளே வழங்கப்படும் என்றும் சுகாதாரத் தரப்புக்கள் மேலும் தெரிவித்துள்ளன.
தடுப்பூசிகள் வழங்கும் நடவடிக்கை பூம்புகார் கிராமத்தின் இடம் பூம்புகார் அல்மின்ஹாஜ் முஸ்லீம் பாடசாலையில் இடம் பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, கிழக்கு மாகாணம், திருகோணமலை