பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ், கைதுசெய்யப்படுவோர், கொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப்பிரிவுகளிலேயே தொடர்ந்து தடுத்து வைத்திருக்க அனுமதிக்கும் விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு தற்காலிக ஏற்பாடுகள் சட்டம் 9 ஆம் பிரிவின் கீழ், ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷவினால், இதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவோரை தடுப்புகாவல் அனுமதியுள்ள காலம் வரையில் கிருலப்பனையில் உள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப்பிரிவிலேயே தடுத்து வைத்திருக்க வழிசெய்யப்பட்டுள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: கோத்தாபய ராஜபக்ஷ, இலங்கை, கொழும்பு