Friday 19th of April 2024 05:11:58 PM GMT

LANGUAGE - TAMIL
.
இலங்கை பக்கம் திரும்பும் வாய்ப்பு: ரீ-20 உலகக் கிண்ண தொடரை நடத்த BCCI பேச்சுவார்த்தை!

இலங்கை பக்கம் திரும்பும் வாய்ப்பு: ரீ-20 உலகக் கிண்ண தொடரை நடத்த BCCI பேச்சுவார்த்தை!


கொரோனா தொற்று பரவல் பின்னணியில் ரீ-20 உலகக் கிண்ண தொடரை இலங்கையில் நடத்தும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.

உலகக் கிண்ண ரீ-20 தொடர் இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில் கொரோனா 2வது அலை காரணமாக அங்கு நடத்துவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா 2வது அலை தீவிரம் பெற்றுள்ள நிலையில் சர்வதேச வீரர்கள் இந்தியாவுக்கு செல்வதற்கு பின்னடிக்கும் நிலை ஏற்படும். இதனால் தொடரை முழுமையாக நடத்த முடியாத நிலை.

இந்நிலையில் மாற்று இடமாக ரீ-20 உலகக் கோப்பையை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

இதற்கிடையில் உலகக்கோப்பைக்கு முன் ஐபிஎல் தொடரில் மீதமுள்ள போட்டிகளையும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

ஐபிஎல் இறுதிப் போட்டி மற்றும் ரீ-20 உலகக்கோப்பை தொடரின் முதலாவது போட்டி ஆகியவற்றிற்கு இடையில் நான்கு நாட்கள் மட்டுமே இடைவெளி உள்ளது.

உலகக்கோப்பைக்கான ஆடுகளங்களை 15 நாட்களுக்கு முன்னதாகவே ஐசிசி-யிடம் ஒப்படைக்க வேண்டும். இதனால் ஐபிஎல் போட்டியை நடத்துவதிலும் சிக்கல் ஏற்படும்.

மேலும் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஷார்ஜா, அபு தாபி, துபாய் ஆகிய மூன்று மைதானங்களே உள்ளன.

ஐ.பி.எல். போட்டிகள் இங்கு தொடர்ச்சியாக இடம்பெறுவதனால் குறித்த ஆடுகளங்கள் தொய்வுடைந்துவிடும் நிலை ஏற்படும்.

இதனால் உலக்கிண்ண தொடருக்கு ஆடுகள்ஙகளை தயார் செய்வது சவாலாக இருக்கம்.

எனவே ஐக்கிய அரபு அமீரகத்தில் ஏதாவது ஒரு தொடரை மட்டுமே நடத்த முடியும் என்ற நிலையேற்பட்டுள்ளதால் இந்திய கிரிக்கெட் வாரியம் திக்குமுக்காடி வருகிறது.

இதையடுத்துதான் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பார்வை இலங்கை மீது திரும்பியுள்ளது.

இதுகுறித்து பிசிசிஐ - ஸ்ரீலங்கா கிரிக்கெட் போர்டு ஆகியவை பேச்சுவார்த்தை நடத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த பேச்சுவார்த்தை ஆரம்ப கட்டத்தில்தான் உள்ளது.

இலங்கையில் உலகக்கோப்பை தொடரை நடத்தினால், மைதானங்களை குறித்த கால அவகாசத்துடன் ஐ.சி.சி யிடம் ஒப்படைப்பதில் எந்த சிக்கலும் ஏற்படாது என பிசிசிஐ கருதியே இந்த நகர்வை ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்துவது தொடர்பில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் தரப்பில் ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ரீ-20 உலகக் கிண்ண தொடர் இந்த ஆண்டு இறுதியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: விளையாட்டு, புதிது
Tags: இந்தியா, இலங்கை, உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE