இங்கிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்யும் இலங்கை அணி இன்று அதிகாலை இங்கிலாந்து நோக்கி பயணத்தை ஆரம்பித்துள்ளது.
தலா மூன்று போட்டிகளை கொண்ட ரீ-20 மற்றும் ஒருநாள் போட்டி தொடரில் இங்கிலாந்து அணியுடன் விளையாட உள்ள இலங்கை அணி இன்று (ஜூன்-09) அதிகாலை இங்கிலாந்து நோக்கி பயணமானது.
ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யு.எல்.1507 என்ற விமானத்தில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இன்று (09) அதிகாலை 12.45 அளவில் அவர்கள் பயணமானகியுள்ளனர்.
இந்தத் தொடருக்கு, குசல் ஜனித் பெரேரா தலைமையிலான, இலங்கை அணிக்குழாம் அண்மையில் அறிவிக்கப்பட்டடிருந்தமை குறிப்பிடத்தக்கது. Category: விளையாட்டு, புதிது
Tags: இங்கிலாந்து, இலங்கை