இந்தியாவில் கடந்த 24 மணி நேரங்களில் 92 ஆயிரத்து 596 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன், கொரோனா தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்ட 2219 பேர் நேற்று உயிரிழந்தனர்.
புதிய தொற்று நோயாளர்களுடன் இந்தியாவில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 90 இலட்சத்து 89 ஆயிரத்து 69 ஆக உயர்ந்துள்ளது.
அத்துடன், கொரோனா வைரஸால் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து 53 ஆயிரத்து 528 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று ஒரே நாளில் 1 இலட்சத்து 62 ஆயிரத்து 664 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இவர்களுடன் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 75 இலட்சத்து 4 ஆயிரத்து 126 ஆக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் தற்போது 12 இலட்சத்து 31 ஆயிரத்து 415 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
நாடு முழுவதும் நேற்று வரை மொத்தம் 23 கோடியே 90 இலட்சத்து 58 ஆயிரத்து 360 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்திய நிலையில் தற்போது தொற்று பரவல் மற்றும் உயிரிழப்புக்கள் குறைந்துள்ளன.
இதனையடுத்து ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளை தளர்த்தப்பட்டு பல மாநிலங்கள் ஓரளவு இயல்புநிலைக்கு திரும்பி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா