Thursday 28th of March 2024 08:28:36 PM GMT

LANGUAGE - TAMIL
-
12 வயதுக்குபட்பட்ட சிறுவர்களுக்கான  தடுப்பூசி பரிசோதனையை ஆரம்பிக்கிறது பைசர்!

12 வயதுக்குபட்பட்ட சிறுவர்களுக்கான தடுப்பூசி பரிசோதனையை ஆரம்பிக்கிறது பைசர்!


12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசியைப் பரிசோதனை செய்ய பைசர் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதற்காக 4,500 சிறுவர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். அமெரிக்கா, பின்லாந்து, போலந்து, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் சோதனை நடக்கும் என பைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

5 முதல் 11 வயதுடைய சிறுவர்களுக்கு 10 மைக்ரோகிராம் அளவிலும் 6 மாதங்கள் முதல் 5 வயதுடைய சிறுவர்களுக்கு 3 மைக்ரோகிராம் அளவிலும் தடுப்பு மருந்து பயன்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக 144 சிறுவர்களிடம் குறைந்த அளவு மருந்தைக் கொண்டு சோதனை நடத்தப்பட்டது. அதில் கண்டறியப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் புதிய பரிசோதனைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இந்தப் பரிசோதனை முடிவுகள் நேர்மறையாக அமைந்தால் செப்ரெம்பர் மாதமளவில் 3 முதல் 12 வயதுக்குட்பட்டவர்களுக்கான தடுப்பூசி அவசர கால பயன்பாட்டுக்கு வரலாம் என பைசர் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஒக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் 6 மாதங்கள் முதல் 2 வயது வரையிலான குழந்தைகளுக்கான தடுப்பூசிக்கு அனுமதி கிடைக்கலாம் எனவும் அவா் குறிப்பிட்டார்.

ஏற்கனவே பல நாடுகளில் 12 முதல் 17 வயது வரையான சிறுவர்களுக்கான தடுப்பூசி பயன்பாட்டக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: உலகம், புதிது
Tags: உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE