12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசியைப் பரிசோதனை செய்ய பைசர் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதற்காக 4,500 சிறுவர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். அமெரிக்கா, பின்லாந்து, போலந்து, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் சோதனை நடக்கும் என பைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
5 முதல் 11 வயதுடைய சிறுவர்களுக்கு 10 மைக்ரோகிராம் அளவிலும் 6 மாதங்கள் முதல் 5 வயதுடைய சிறுவர்களுக்கு 3 மைக்ரோகிராம் அளவிலும் தடுப்பு மருந்து பயன்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக 144 சிறுவர்களிடம் குறைந்த அளவு மருந்தைக் கொண்டு சோதனை நடத்தப்பட்டது. அதில் கண்டறியப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் புதிய பரிசோதனைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இந்தப் பரிசோதனை முடிவுகள் நேர்மறையாக அமைந்தால் செப்ரெம்பர் மாதமளவில் 3 முதல் 12 வயதுக்குட்பட்டவர்களுக்கான தடுப்பூசி அவசர கால பயன்பாட்டுக்கு வரலாம் என பைசர் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஒக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் 6 மாதங்கள் முதல் 2 வயது வரையிலான குழந்தைகளுக்கான தடுப்பூசிக்கு அனுமதி கிடைக்கலாம் எனவும் அவா் குறிப்பிட்டார்.
ஏற்கனவே பல நாடுகளில் 12 முதல் 17 வயது வரையான சிறுவர்களுக்கான தடுப்பூசி பயன்பாட்டக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.