அட்லியுடன் ராஜா ராணி படத்தில் பணியாற்றிய ஜெய், தற்போது அவருடன் மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆர்யா நடிப்பில் வெளியான ‘ராஜா ராணி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தான் அட்லி. பின்னர் விஜய்யுடன் தெறி, மெர்சல், பிகில் என ஹிட் படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக உயர்ந்தார்.
இயக்குனர் அட்லி, தனது மனைவி பிரியாவுடன் இணைந்து பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார். இவர்கள் தயாரிப்பில் சங்கிலி புங்கிலி கதவ தொற, அந்தகாரம் போன்ற படங்கள் வெளியாகின.
இந்நிலையில், அட்லியின் அடுத்த படத்தில் நடிகர் ஜெய் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே அட்லீயுடன் ராஜா ராணி படத்தில் பணியாற்றிய ஜெய், தற்போது அவருடன் மீண்டும் இணையவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.