Wednesday 24th of April 2024 02:13:56 AM GMT

LANGUAGE - TAMIL
.
சுகாதார துறைசார் 26 தொழிற்ச் சங்கங்கள் இன்றும் பணிப்புறக்கணிப்பு!

சுகாதார துறைசார் 26 தொழிற்ச் சங்கங்கள் இன்றும் பணிப்புறக்கணிப்பு!


தற்போதைய கோவிட்-19 இடர்கால பணி தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த நாட்களில் தொடர்ச்சியாக அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்து வரும் சுகாதார சேவையாளர் சங்கங்கள் இன்றும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட உள்ளன.

இந்த பணிப்பகிஷ்கரிப்பானது, இன்று வெள்ளிக்கிழமை காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணிவரை முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

போதுமான சுகாதார பாதுகாப்பு உடைகள், முகக்கவசம், கையுறைகள் மற்றும் தொடர்ச்சியாக பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கான உணவு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மேற்படி பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.

இருப்பினும், கொவிட் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனைகள் மற்றும் 15 சிறுவர் மருத்துவமனைகள் ஆகியவற்றிலுள்ள சுகாதார சேவையாளர்கள் இந்த பணிப்புறக்கணிப்பில் ஈடுபடப்போவதில்லை என சுகாதார சேவையாளர்கள் சங்கங்கள் அறிவித்துள்ளன.

அரச கதிரியக்க மற்றும் தொழிநுட்வியலாளர்கள் சங்கம், குடும்ப நல சுகாதார சேவை சங்கம் மற்றும் அரச தாதியர் சங்கம் உள்ளிட்ட சுகாதாரதுறைசார் 26 தொழிற்ச் சங்கங்கள் இந்த பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளன.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE