Friday 19th of April 2024 07:39:48 PM GMT

LANGUAGE - TAMIL
.
மட்டக்களப்பை மிரட்டும் கொரோனா: ஒரே நாளில் நால்வரை பலியெடுத்து 57 பேருக்கு பாதிப்பு!

மட்டக்களப்பை மிரட்டும் கொரோனா: ஒரே நாளில் நால்வரை பலியெடுத்து 57 பேருக்கு பாதிப்பு!


மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 57 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் நால்வர் உயிரிழந்துள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.

இன்று (ஜூன்-11) காலை மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை மொத்தமாக 3,637 பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்ட நிலையில் 54 மரணங்கள் பதிவாகியுள்ளது.

கொரோனா மூன்றாவது அலையின் காரணமாக இதுவரை 2,711 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன் 42 மரணங்களும் ஏற்பட்டுள்ளன.

கடந்த ஏழு தினங்களில் 707 கொரோனா தொற்றாளர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை கடந்த மூன்று தினங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 9,148 பேருக்கு கோவிட் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE