Tuesday 16th of April 2024 03:08:39 AM GMT

LANGUAGE - TAMIL
.
ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் உட்பட சங்கானை MOH பிரிவில் 10 பேருக்கு கொரோனா!

ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் உட்பட சங்கானை MOH பிரிவில் 10 பேருக்கு கொரோனா!


யாழ். போதனா வைத்திய சாலை ஆய்வு கூடத்தில் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் உட்பட சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் நேற்று (ஜூன்-10) இரவு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் யாழ் குடாநாட்டில் 21 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஆய்வுகூட தரப்பில் இருந்து அருவி இணையத்திற்கு தெரிவிக்கப்பட்டிருந்தது.

இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்ட 21 பேரில் சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 10 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 19 பேரிடம் பெறப்பட்டிருந்த மாதிரிகள் பரிசோனைக்கு உட்படுத்தப்பட்டதிலேயே இவ்வாறு 10 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் உள்ளடங்கியுள்ளமை தெரியவந்துள்ளது.

தாயார் (49 வயது) மற்றும் மூன்று பிள்ளைகளுக்கும் (23 வயது மகள் மற்றும் 12, 13 வயது மகன்கள் இருவர்) இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் தவிர, 15 வயது சிறுவன் உள்ளிட்ட 19, 26, 39 வயது ஆண்களும், 16 வயது சிறுமி மற்றும் 65 வயது பெண்மணி ஆகியோருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE