Friday 19th of April 2024 07:18:49 AM GMT

LANGUAGE - TAMIL
.
இலங்கையில் கொரோனா பலியெடுப்பு உச்சம்: மேலும் 101 பேர் உயிரிழப்பு!

இலங்கையில் கொரோனா பலியெடுப்பு உச்சம்: மேலும் 101 பேர் உயிரிழப்பு!


இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களது எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வந்த நிலையில் மேலும் 101 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன்-08, 09 ஆகிய நாட்களில் முறையே 54 மற்றும் 67 பேர் உயிரிழந்தாக அறிவிக்கப்பட்ட நிலையில் மேலும் 101 பேர் கோவிட்-19 மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக சற்று முன்னதாக தொற்று நோயியல் பிரிவின் பிந்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றிரவு 11 மணி வரையான காலப்பகுதியில் மேலும் 101 கொரோனா மரணங்கள் பதிவானதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இன்று அறிவித்துள்ளது.

இதையடுத்து இதுவரை இலங்கையில் கொரோனாத் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களது மொத்த எண்ணிக்கை 1,910 இல் இருந்து 2,011 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இந்த மரணங்கள் எந்தக் காலப்பகுதியில் பதிவானவை என்பது குறித்த தெளிவான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE