நான்கு வயது சிறுவன் ஒருவருக்குப் பியர் அருந்துமாறு வற்புறுத்தி அதனை வழங்கிய 25 வயதுடைய இளைஞர் ஒருவர் பெலியகொட பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சிறுவன் பியர் அருந்தும் காணொளி சமூகவலைத்தளங்களில் வெளியாகியிருந்தது. இந்நிலையிலேயே இன்று கைது இடம்பெற்றுள்ளது.
பியர் அருந்தக் கொடுத்த இளைஞருக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.