Friday 19th of April 2024 07:37:26 AM GMT

LANGUAGE - TAMIL
.
மட்டக்களப்பில் பயணத்தடையை மீறி இரவில் நடமாடியோருக்கு அன்டிஜன் பரிசோதனை: நால்வருக்கு கொரோனா!

மட்டக்களப்பில் பயணத்தடையை மீறி இரவில் நடமாடியோருக்கு அன்டிஜன் பரிசோதனை: நால்வருக்கு கொரோனா!


பயணத்தடை கட்டுப்பாட்டினை மீறி மட்டக்களப்பு கோறளைப்பற்று மத்தி பிரதேசத்தில் இரவில் நடமாடியவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் நால்வருக்கு கொரோனாத் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அதிகரித்து வரும் நிலையில் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி நாகலிங்கம் மயூரன் வழிகாட்டலில் கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.ரி.நஜீப்காப் தலைமையில் பல்வேறு வேலைத் திட்டங்கள் நடைபெற்று வருகின்றது.

இதன் அடிப்படையில் பயணக் கட்டுப்பாட்டை மீறி இரவு நேரங்களில் வீதிகளில் நடமாடுபவர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளும் நடமாடும் வேலைத்திட்டம் புதன்கிழமை தொடக்கம் இடம் பெற்று வருகின்றது.

அந்தவகையில் நேற்று வியாழக்கிழமை பயணக் கட்டுப்பாட்டை மீறி இரவு நேரங்களில் வீதிகளில் நடமாடிய முப்பத்திரெண்டு (32) நபர்களுக்கு மேற்கொண்ட அன்டிஜன் பரிசோதனையில் நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.ரி.நஜீப்காப் தலைமையில் நடைபெற்ற பரிசோதனை நிகழ்வில்; மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் எம்.எஸ்.நௌபர், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், சுகாதார வைத்திய அலுவலக உத்தியோகத்தர்கள், வாழைச்சேனை பொலிஸார் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE