Tuesday 16th of April 2024 04:14:06 AM GMT

LANGUAGE - TAMIL
-
எத்தியோப்பியாவில் கடும் பஞ்சம்;  பட்டினிச் சாவுகள் ஏற்படும் அபாயம்!

எத்தியோப்பியாவில் கடும் பஞ்சம்; பட்டினிச் சாவுகள் ஏற்படும் அபாயம்!


வடக்கு எத்தியோப்பியாவில் கடும் பஞ்சம் நிலவுவதாக ஐ.நா. அவசர நிவாரண ஒருங்கிணைப்பாளரும் உலகின் மிக மூத்த மனிதாபிமான விவகார அதிகாரியுமாக மார்க் லோகாக் தெரிவித்துள்ளார்.

இப்போதுள்ள நிலை தொடர்ந்தால் நிலைமை மேலும் மோசமாகும் எனவும் அவா் எச்சரித்துள்ளார்.

டீக்ரே பிராந்தியத்தில் 353,000 பேர் பஞ்சத்தில் 5 ஆம் கட்டத்தில் (பேரழிவு நிலை ) இருப்பதாகவும், மேலும் 1.769 மில்லியன் பேர் 4 ஆம் கட்டத்தில் (அவசரநிலை) இருப்பதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அரசாங்கப் படைகளுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான போரில் டீக்ரே பேரழிவிற்கு உள்ளாகியுள்ளது. 17 இலட்சம் பேர் தங்கள் சொந்த நிலங்களையும் வாழ்விடங்களையும் விட்டு இடம்பெயர்ந்துள்ளனர்.

இந்த மக்களுக்கு உணவு கிடைப்பது மிகவும் மோசமான நிலையை அடைந்திருப்பதாக மதிப்பீடுகள் கூறுகின்றன. மக்கள் பட்டினிச் சாவை எதிர்கொள்வதாக அம்மதிப்பீடுகள் அங்கு நிலவும் பசிப் பிரச்சனையை வரையறுக்கின்றன.

ஐக்கிய நாடுகள் சபையின் உணவுத் திட்டம், உணவு மற்றும் விவசாய அமைப்பு, ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் முகமையான யுனிசெப் உட்பட பல்வேறு அமைப்புகளும் இப்பிரச்சனையைக் குறித்து உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளன.

1984-இல் ஏற்பட்ட எத்தியோப்பியப் பஞ்சம் உலகின் மனசாட்சியை உலுக்கியது. வறட்சியாலும், போராலும் ஏற்பட்ட அந்தப் பஞ்சமும் டீக்ரே மற்றும் வூலோ பகுதிகளில்தான் மையம் கொண்டிருந்தன. அப்பஞ்சத்தில் ஆறு முதல் 10 இலட்சம் பேர் வரை உயிரிழந்தனர்.

இந்நிலையில் டீக்ரே, அம்ஹாரா, அஃபார் போன்ற பகுதியில் நடத்தப்பட்ட ஆய்வில் இப்பகுதிகளில் வாழும் 55 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்வதாக புதிய ஆய்வறிக்கை குறிப்பிட்டுள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE