Friday 19th of April 2024 03:52:38 AM GMT

LANGUAGE - TAMIL
-
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரினால் ஒரு தொகுதி சுகாதார பொருட்கள் கையளிப்பு!

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரினால் ஒரு தொகுதி சுகாதார பொருட்கள் கையளிப்பு!


அரச சார்பற்ற அமைப்புக்களினால் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்ட ஒரு தொகுதி சுகாதார பொருட்கள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (11) மதியம் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மெலினால் சுகாதார துறையினருக்கு கையளிக்கப்பட்டுள்ளது.

-கொரானா தொற்று சிகிச்சை நிலையங்களில் கடமையாற்றுபவர்களுக்கு என அரச சார்பற்ற அமைப்புக்களினால் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரிடம் முகக்கவசம், தொற்று நீக்கி உள்ளிட்ட பல்வேறு சுகாதாரப் பொருட்கள் கைகளிக்கப்பட்டது.

குறித்த சுகாதார பொருட்கள் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் உள்ள கொரோனா சிகிச்சை நிலையத்தில் கடமையாற்றும் உத்தியோகஸ்தர்களுக்கும்,மன்னார் மாவட்டத்தில் கடமையாற்றுகின்ற பொது சுகாதார பரிசோதகர்களுக்கும் வழங்கி வைக்கும் வகையில் இன்று வெள்ளிக்கிழமை (11) மதியம் மன்னார் மாவட்டச் செயலகத்தில் வைத்து மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மெல் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.

இதன் போது வைத்தியர், மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி, மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், மன்னார்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE