எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்வதற்கு வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை உப குழு அனுமதி வழங்கியுள்ளது.
திருத்தம் மேற்கொள்ளப்படும் திகதி விரைவில் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
இதன்படி எரிபொருள் விலை விரைவில் அதிகரிக்கக் கூடும் என அறியமுடிகின்றது.
அவ்வாறானதொரு அதிகரிப்புக்கே வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை உப குழு அனுமதி வழங்கியுள்ளது.
"உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டபோதிலும், 21 மாதங்களாக விலை அதிகரிப்பை நாம் செய்யவில்லை. மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில்கொண்டு அதிகரிப்பு செய்யாமல் இருந்தோம். அதிக விலைக்கு எரிபொருளை வாங்கி குறைந்த விலைக்கு விற்பனை செய்வதால் அரசுக்கு பெரும் நட்டம் ஏற்பட்டுள்ளது" என்று அமைச்சர் உதய கம்மன்பில சுட்டிக்காட்டினார்.