யாழ்.போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கிளிநொச்சி மாவட்டத்தில் 18வ தொற்றாளர்கள் உட்பட வடக்கில் இன்று 37 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று தனிமைப்படுத்தல் நிலையங்களைச் சேர்ந்தவர்கள் உட்பட்ட 601 பேருக்கு பிசிஆர் பரிசோதனைகள் இடம்பெற்றிருந்தன.
அவற்றில் தனிமைப்படுது்தல் நிலையங்களைச் சேர்ந்த 14 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் ஆனைவிழுந்தான் குழத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 12 பேரும், பெரியகாட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள இருவரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனைவிடவும் வடக்கு மாகாணத்தில் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்கள் விபரம் வருமாறு,
கிளிநொச்சி மாவட்டத்தில் 18 பேர்
கரைச்சி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 17 பேர்,
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர்,
யாழ்.மாவட்டத்தில் 12 பேர்
யாழ்.போதனா வைத்தியசாலையில் 06 பேர்,
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 03 பேர்,
இளவாலை பிரதேச வைத்தியசாலையில் ஒருவர்,
சங்கானை சுகாதார வைத்தியசாலையில் 02 பேர்,
வவுனியா மாவட்டத்தில் 03 பேர்
பூவசரங்குளம் பிரதேச வைத்தியசாலையில் ஒருவர்,
வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர்,
வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர்
மன்னார் மாவட்டத்தில் ஒருவர்
மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர்,
முல்லைத்தீவு மாவட்டத்தில் மூவர்
மாந்தை கிழக்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இருவர்,
வெலி ஓயா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர்
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம், கிளிநொச்சி