முல்லைத்தீவு மாவட்டம் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சாலை பகுதியில் மோட்டார் எறிகணைகள் சிறப்பு அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளன.
அரச புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது 15 வரையான மோட்டார் எறிகணைகள் மீட்கப்பட்டுள்ளன.
நாளை முல்லைத்தீவு நீதிமன்ற அனுமதி பெறப்பட்ட பின்னர் குறித்த எணிகணைகள் செயலிழக்கச் செய்யப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், முல்லைத்தீவு