கொழும்பு ஐ.டி.எச். வைத்தியசாலை கொரோனா நோயாளர்களால் நிரம்பியுள்ளது என அதன் பணிப்பாளர் வைத்தியர் ஹசித அத்தநாயக்க தெரிவித்தார்.
நாட்டில் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வரும் நிலையில், இந்த நிலை ஏற்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், ஐ.டி.எச். வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவிலும் கூடுதலான நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருவதால் அந்தப் பிரிவிலுள்ள அனைத்து நோயாளர் கட்டில்களும் பூரணமாகியுள்ளன எனவும் அவர் கூறினார்.
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு கவலைக்கிடமான நிலைக்குத் தள்ளப்படுகின்ற நோயாளர்களுக்கு கொழும்பு ஐ.டி.எச். வைத்தியசாலையே சிகிச்சையளித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
எது எவ்வாறாயினும், தற்போதைய நிலைமையை முடிந்தளவு முகாமைத்துவம் செய்துகொண்டு மருத்துவமனையில் அன்றாட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம் எனவும் வைத்தியர் தெரிவித்தார்.
அதேபோல், மருத்துவமனையில் உள்ள ஒக்சிசன் தட்டுப்பாட்டுக்குத் தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.