"நாட்டை முடக்கி வைத்திருப்பதே எமக்கிருக்கும் ஒரே தீர்வாகும். இதற்கு முன்னரும் இரண்டரை மாதங்கள் நாடு முடக்கப்பட்டது." - இவ்வாறு இலங்கை வைத்தியர்கள் சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன தெரிவித்தார்.
"நாட்டை முடக்குவதால் உடனடியாகப் பெறுபேறுகளை எதிர்பார்க்க முடியாது. ஆகவே, அதற்கான பெறுபேறுகள் வரும் வரையில் நாம் நாட்டை முடக்கி வைத்திருக்க வேண்டும். பொறுமையாக மக்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகள் எடுத்தாக வேண்டும்" எனவும் அவர் குறிப்பிட்டார்.
கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக்குள் இல்லாத இக்கட்டான காலகட்டத்தில் பயணக் கட்டுப்பாட்டை தளர்த்துவது மிகவும் பாரதூரமான விடயம் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.
"இரண்டும்கெட்டான் நிலையில் நாட்டைத் திறப்பதால் சுகாதாரத்துறை பாரிய நெருக்கடியை சந்திக்க நேரிடும். வைரஸ் பரவல் வேகம் அதிகரித்தால் மரண வீதமும் வேகமாக அதிகரிக்கும்" எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம்