இயக்குநர் மிலிந்த் ராவ் இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள படம் நெற்றிக் கண் இது ஓடிடியில் வெளியாகவுள்ளதாகத் தகவல் தெரிவிக்கின்றன.
ப்ளைண்ட் என்ற கொரிய படத்தை தமிழில் நெற்றிக்கண் என்ற பெயரில் ரிமேக் செய்துள்ளார், இப்படத்தின் நடிகை நயன் தாரா மற்றும் அஜ்மல் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படத்திற்கு கிரிஷ் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இதன் முதல் சிங்கில் ஜூன் மாதம் 9 ஆம் திகதி வெளியானது.
இந்நிலையில், தற்போது கொரொனா இரண்டாவது அலை பரவிவரும் நிலையில் திரையரங்குகள் இப்போதைக்கு திறக்காது. எனவே, நெற்றிக்கண் படக்குழுவினர் ஓடிடியில் இப்படத்தை வெளியிடுவதற்கான பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்படி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் இப்படத்தை வெளியிடுவதாக முடிவு செய்துள்ளனர்.
Category: சினிமா, புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா