Tuesday 23rd of April 2024 05:21:16 PM GMT

LANGUAGE - TAMIL
-
என்னை ஏமாற்றிவிட்டார் ரணில் - புலம்புகின்றார் ஜோன் அமரதுங்க!

என்னை ஏமாற்றிவிட்டார் ரணில் - புலம்புகின்றார் ஜோன் அமரதுங்க!


"தோல்வியடைந்தவர்களுக்குத் தேசியப்பட்டியல் ஊடாக வாய்ப்பு வழங்கப்படாது என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்திருந்தார். எனினும், அதற்கு எதிரான வகையில் தற்போது அவர் முடிவெடுத்துள்ளார்." என ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான ஜோன் அமரதுங்க தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் "பொதுத்தேர்தலில் போட்டியிட இருந்தேன். எனினும், தேசியப்பட்டியல் நியமனம் எனக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்தார். இதன்படி தேசியப்பட்டியலில் எனது பெயர் முதலாவதாக பெயரிடப்பட்டிருந்தது. ஆனால், தற்போது ரணில் ஏமாற்றிவிட்டார்.

தோல்வியடைந்தவர்களுக்கு தேசியப்பட்டியல் ஊடாக வாய்ப்பு வழங்கப்படாது என ரணில் அறிவித்திருந்தார். எனினும், அதற்கு எதிரான வகையில் தற்போது அவர் முடிவெடுத்துள்ளார்.

அரசியலே எனக்கு வெறுத்துவிட்டது. ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுவது தொடர்பில் எதிர்காலத்தில் பார்க்கலாம்" என்று குறிப்பிட்டுள்ளார்.


Category: செய்திகள், புதிது
Tags: ரணில் விக்கிரமசிங்க, இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE