Wednesday 24th of April 2024 08:52:40 PM GMT

LANGUAGE - TAMIL
-
முல்லைத்தீவு கூழாமுறிப்பு பாடசாலையில் தீ பரவல்! வகுப்பறைக் கொடில் எரிந்தழிந்தது!

முல்லைத்தீவு கூழாமுறிப்பு பாடசாலையில் தீ பரவல்! வகுப்பறைக் கொடில் எரிந்தழிந்தது!


முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட கூழாமுறிப்பு அரசினர் தமிழ்கலவன் பாடசாலையில் ஏற்பட்ட தீ விபத்தினால் வகுப்பறைக் கொட்டில் ஒன்று முற்றாக எரிந்தழிந்துள்ளது.

சற்று முன்னர் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தீயினைக் கட்டுப்படுத்த கிராமத்து மக்கள் முயன்ற போதிலும் அதனைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்று அங்கிருந்து அருவியின் பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

தீப் பரவலுக்கான காரணம் உடனடியாகத் தெரியவரவில்லை.

முல்லைத்தீவு மாவட்டத்தில் தீ அணைப்பு வாகனங்கள் எதுவும் சேவையில் இல்லாமையால் அடிக்கடி இவ்வாறான அனர்த்தங்கள் நிகழும் போது அழிவுகளைத் தவிர்க்க முடியாத அவல நிலை தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், முல்லைத்தீவு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE