Friday 29th of March 2024 06:58:11 AM GMT

LANGUAGE - TAMIL
-
ஜனவரி தொடக்கம் போதைப்பொருள் வியாபாரம் தொடர்பில் 17,026 பேர் கைது!

ஜனவரி தொடக்கம் போதைப்பொருள் வியாபாரம் தொடர்பில் 17,026 பேர் கைது!


ஜனவரி மாதம் 01 ஆம் திகதி தொடக்கம் இதுவரையான காலப்பகுதியில் போதைப்பொருள் வியாபார வழக்கில் 17,026 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அந்த காலப்பகுதிக்குள் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில் 408 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமாகிய அஜித் ரோஹண தெரிவித்தார்.

அதேபோல், 298 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருள், 2,166 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டு 13 பேர் வௌிநாடுகளில் வசித்து வருவதாகவும் குறித்த நபர்கள் உட்பட பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் 24 நபர்களுக்கு எதிராக சிவப்பு அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளதாகவும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் குறிப்பிட்டார்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE