ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க இன்று காலை பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்கவுள்ளார்.
இன்று உள்நாட்டு திறைசேரி உண்டியல் கட்டளைச் சட்டத்தின் கீழான தீர்மானம், ஏற்றுமதி இறக்குமதி கட்டளைச் சட்டத்தின் கீழான 2 ஒழுங்குவிதிகளும், அரசாங்கத்தின் அத்தியாவசிய செலவீனங்கள் மற்றும் கொவிட்-19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்காக முன்வைக்கப்பட்டுள்ள குறைநிரப்பு மதிப்பீடும் விவாதத்துக்கு பாராளுமன்றில் எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
இதனிடையே இன்று காலை 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன முன்னிலையில் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்வார்.
2020 பொதுத் தேர்தலின் பின்னர் வெற்றிடமான ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிக்கு ரணில் விக்ரமசிங்கவை பெயரிடுவதாக கட்சியினர் கடந்த வாரம் ஒரு மனதாக அறிவித்திருந்தனர்.
அந்த அறிவிப்பின் பின்னர் தேசிய தேர்தல் ஆணையகத்தினால் ரணில் விக்ரமசிங்கவை பாராளுமன்ற உறுப்பினராக அறிவித்து வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: ரணில் விக்கிரமசிங்க, இலங்கை