ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றத்துக்கு தெரிவான, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்ற உறுப்பினராக சபாநாயகர் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார்.
கடந்த 2020 ஓகஸ்ட் 5 ஆம் திகதி இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி எந்தவொரு ஆசனத்தையும் கைப்பற்றியிருக்கவில்லை.
கட்சி பெற்றுக்கொண்ட மொத்த வாக்குகளின் அடிப்படையில் அக்கட்சிக்கு ஒரு தேசியப் பட்டியல் கிடைத்தது.
இந்நிலையில், புதிய நாடாளுமன்றம் அமையப் பெற்று, சுமார் 10 மாதங்கள் கழிந்த நிலையில், குறித்த தேசியப் பட்டியலுக்காக ரணில் விக்ரமசிங்கவை அக்கட்சியின் செயற்குழு பெயரிட்டது.
அதன் அடிப்படையில் இன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன முன்னிலையில் ரணில் விக்கிரமசிங்க பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
Category: செய்திகள், புதிது
Tags: ரணில் விக்கிரமசிங்க, இலங்கை