கொலைக் குற்றத்திற்காக 2018-ஆம் ஆண்டில் இலங்கை நீதிமன்றால் மரண தண்டனை விதிக்கப்பட்ட துமிந்த சில்வா இலங்கை ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் விடுவிக்கப்பட்டமை சட்டத்தின் ஆட்சியைக் கேள்விக்குள்ளாக்குகிறது என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா பி. டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் சிலரின் முதற்கட்ட விடுதலையை வரவேற்பதாகவும் பொறுப்புக்கூறல் மற்றும் அனைவருக்கு சம நீதியை உறுதி செய்தல் ஆகியவை ஐ.நா.வின் நிலையான அபிவிருத்தி அறிக்கைக்கு அடிப்படையானவை எனவும் அவா் தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
Category: செய்திகள், புதிது
Tags: கோத்தாபய ராஜபக்ஷ, இலங்கை