எங்களுடைய எதிர்கால நலன் கருதி எங்கள் அப்பாவையும் விடுதலை செய்யவேண்டும் என்று அரசியல் கைதி ஆனந்தசுதாகரின்ன பிள்ளைகள் அமைச்சர் நாமல் ராஜபக்சபக்சவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வடமராட்சியில் தேசனக் குப்பைகளை உரமாக்கும் தொழில்நிலையம் திறப்பு நிகழ்வில் அமைச்சர் நாமல் ராஜபக்க பங்குகொண்டிருந்தார்.
இதன் போது அங்கு சென்றிருந்த அரசியல் கைதி ஆனந்தசுதாகரனின் பிள்ளைகள் மற்றும் சில அரசியல் கைதிகளின் உறவினர்கள் தமது உறவினர்களை விடுவிக்க வேண்டும் என்று உருக்கமாக கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதன் போது நாமல் ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்த ஆனந்த சுதாகரனின் பிள்ளைகள்,
தம்மை தமது அம்மம்மாவே பராமரித்துவருவதாகவும் அவருடம் இடையிடையே உடல் நிலைப் பாதிப்புக்கு உள்ளாகிவருவதால் தம்மைப் பார்த்துக்கொள்ள எவரும் இல்லை என்பதாலும் தந்தையை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர்கள் உருக்கமாக கோரிக்கை விடுத்துள்ளனர்.
நல்லாட்சிக் காலத்தில் ஆனந்தசுதாகரனின் மனைவி உயிரிழந்தபோது, மனைவியின் இறுதிச் சடங்குக்கு வந்திருந்த தந்தை மீளவும் சிறைச்சாலைக்குச் செல்லச் சென்றபோது அவருடைய சிறிய மகள் தந்தையுடன் சென்று சிறைச்சாலை வாகனத்தில் ஏற முற்பட்டமை மிகுந்த துயரத்தை தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கரவெட்டி