'கோலமாவு கோகிலா’ திரைப்படத்திற்கு பிறகு இயக்குநர் நெல்சன் திலீப் குமார் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்கியுள்ள திரைப்படம் ‘டாக்டர்.
இந்த படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார் பிரியங்கா மோகன். இவருடன் யோகிபாபு, வினய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
'டாக்டர்' திரைப்படம் முதலில் கடந்த மார்ச் 26 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. அப்போது தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் வேலைகள் நடைபெற்று வந்ததால் பட வெளியீட்டை ஒத்தி வைத்தனர் படக்குழுவினர்.
தற்போது இந்தியாவில் கொரோனா பரவல் குறைந்து வருவதால் விரைவில் திரையரங்குகள் திறக்கப்படும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15 ஆம் திகதி டாக்டர் படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Category: சினிமா, புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா