Tuesday 23rd of April 2024 07:46:17 AM GMT

LANGUAGE - TAMIL
.
தமிழ்நாட்டில் தணியும் கொரோனா தொற்று: சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 42,801 ஆக வீழ்ச்சி!

தமிழ்நாட்டில் தணியும் கொரோனா தொற்று: சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 42,801 ஆக வீழ்ச்சி!


தமிழ்நாட்டில் கொரோனா தொற்று எண்ணிக்கை படிப்படியாக குறைவடைந்து வரும் நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களது எண்ணிக்கையும் 42,801 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.

நேற்று (ஜூன்-27) மாலை வரையான நிலவரத்தின் அடிப்படையில் தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் நேற்று மலையுடனான கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தொற்றுதியானவர்களது எண்ணிக்கை 5 ஆயிரத்து 127 ஆக பதிவாகியுள்ளது.

அதிகபட்சமாக,

கோயம்பத்தூரில் - 649 பேர்

ஈரோட்டில் - 530 பேர்

சேலத்தில் - 343 பேர்

திருப்பூரில் - 316 பேர்

சென்னையில் - 308 பேர்

ஆகிய மாவட்டங்களில் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதையடுத்து தமிழ்நாட்டில் இதுவரை கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களது மொத்த எண்ணிக்கை 24 இலட்சத்து 65 ஆயிரத்து 874 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் சிகிச்சை பலனின்றி மேலும் 91 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து தமிழ்நாட்டில் இதுவரை உயிரிழந்தவர்களது மொத்த எண்ணிக்கை 32 ஆயிரத்து 290 ஆக உயர்ந்துள்ளது.

இதையடுத்து தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களது எண்ணிக்கை 42,801 ஆக குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா, தமிழ்நாடு, சென்னை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE