Friday 19th of April 2024 11:27:55 PM GMT

LANGUAGE - TAMIL
.
ரொனால்டோவின் கனவு தகர்ந்தது: யூரோ கிண்ண கால்பந்து தொடரின் காலிறுதியுடன் வெளியேறியது போர்த்துக்கல்!

ரொனால்டோவின் கனவு தகர்ந்தது: யூரோ கிண்ண கால்பந்து தொடரின் காலிறுதியுடன் வெளியேறியது போர்த்துக்கல்!


யூரோ கிண்ண கால்பந்து தொடரின் காலிறுதி தகுதி ஆட்டத்தில் பெல்ஜியம் அணியிடம் தோல்வியடைந்து தொடரில் இருந்து போர்த்துக்கல் அணி வெளியேறியுள்ளதன் மூலம் ரொனால்டோவின் கனவு தகர்ந்துள்ளது.

யூரோ கிண்ண கால்பந்து சாம்பியன் தொடர் ஸ்பெயின், செவில்லில் நடைபெற்று வருகிறது.

இத்தொடரின் காலிறுதிக்கு முந்தைய நொக்-அவுட் சுற்றில் நடைபெற்ற போட்டி ஒன்றில் ஐரோப்பிய சாம்பியனான போர்த்துக்கல் அணி பெல்ஜியம் அணியை எதிர்கொண்டது.

போர்த்துக்கல் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கடைசியாக விளையாடும் ஐரோப்பிய சாம்பியன் ஷிப் தொடர் இதுவாக இருக்கலாம் என கருதப்படுவதால் கால்பந்து ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில் பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் பெல்ஜியம் அணியிடம் 1:0 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது போர்த்துக்கல் அணி.

இந்த தோல்வி மூலம் ஐரோப்பிய சாம்பியன் போர்த்துக்கல் அணி இம்முறை காலிறுதிக்கு முந்தை சுற்றுடன் தொடரில் இருந்து வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

போர்த்துக்கலை வீழ்த்திய பெல்ஜியம் அணி காலிறுதியில் இத்தாலி அணியை எதிர்கொள்கிறது.


Category: விளையாட்டு, புதிது
Tags: உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE