Friday 19th of April 2024 12:00:27 PM GMT

LANGUAGE - TAMIL
.
ரீ-20 உலகக் கிண்ணத் தொடர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடத்த தீர்மானம்!

ரீ-20 உலகக் கிண்ணத் தொடர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடத்த தீர்மானம்!


இந்தியாவில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த ஐ.சி.சி. ரீ-20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரை ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஐ.சி.சி. ரீ-20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த நிலையில் இந்தியாவில் அதிகரித்த கொரோனா 2வது அலை காரணமாக போட்டித் தொடரை நடத்த மாற்று இடம் பரிசீலிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடத்துவதற்கு முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில் ஏஞ்சிய ஐ.பி.எல். போட்டிகளும் அங்கு நடைபெற இருப்பதால் போட்டி அட்டவணையில் நெருக்கடிகள் ஏற்படும் நிலை காணப்பட்டது.

இதையடுத்து ஐ.சி.சி. ரீ-20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரை இலங்கையில் நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வந்திருந்தது.

இந்நிலையில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஐ.சி.சி. ரீ-20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரை நடத்துவது என இறுதியாக தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: விளையாட்டு, புதிது
Tags: இந்தியா, உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE