Wednesday 24th of April 2024 07:39:14 PM GMT

LANGUAGE - TAMIL
.
தமிழ்நாட்டில் தணியும் கொரோனா பாதிப்பு: தொற்றுறுதியான நிலையில் 39,335 பேர் சிகிச்சையில்!

தமிழ்நாட்டில் தணியும் கொரோனா பாதிப்பு: தொற்றுறுதியான நிலையில் 39,335 பேர் சிகிச்சையில்!


தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு தணிந்து வரும் நிலையில் தொற்று உறுதியான நிலையில் சிகிச்சை பெற்று வருபவர்களது எண்ணிக்கை 39,335 ஆக குறைவடைந்துள்ளன.

நேற்று (ஜூன்-29) மாலை வரையான நிலவரத்தின் அடிப்படையில் தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் நேற்று மலையுடனான கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தொற்றுதியானவர்களது எண்ணிக்கை 4 ஆயிரத்து 512 ஆக பதிவாகியுள்ளது.

அதிகபட்சமாக,

கோயம்பத்தூரில் - 563 பேர்

ஈரோட்டில் - 493 பேர்

சேலத்தில் - 302 பேர்

திருப்பூரில் - 281 பேர்

சென்னையில் - 275 பேர்

ஆகிய மாவட்டங்களில் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதையடுத்து தமிழ்நாட்டில் இதுவரை கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களது மொத்த எண்ணிக்கை 24 இலட்சத்து 75 ஆயிரத்து 190 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் சிகிச்சை பலனின்றி மேலும் 118 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து தமிழ்நாட்டில் இதுவரை உயிரிழந்தவர்களது மொத்த எண்ணிக்கை 32 ஆயிரத்து 506 ஆக உயர்ந்துள்ளது.

இதையடுத்து தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களது எண்ணிக்கை 39,335 ஆக குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா, தமிழ்நாடு, சென்னை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE